Skip to main content

அம்மன்

ஓம் அறிவுருவே போற்றி

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

ஓம் அருமறையின் வரம்பே போற்றி

ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி

ஓம் அரசிளங்குமரியே போற்றி

ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி

ஓம் அமுதநாயகியே போற்றி

ஓம் அருந்தவநாயகியே போற்றி

ஓம் அருள் நிறை அம்மையே போற்றி

ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி

ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி

ஓம் ஆதியின் பாதியே போற்றி

ஓம் ஆலால சுந்தரியே போற்றி

ஓம் ஆனந்த வல்லியே போற்றி

ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி

ஓம் இமயத்தரசியே போற்றி

ஓம் இடபத்தோன் துணையே போற்றி

ஓம் ஈசுவரியே போற்றி

ஓம் உயிர் ஓவியமே போற்றி

ஓம் உலகம்மையே போற்றி

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் எண் திசையும் வென்றோய் போற்றி

ஓம் ஏகன் துணையே போற்றி

ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி

ஓம் ஒப்பிலா அமுதே போற்றி

ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி

ஓம் கற்றோர்க்கு இனியோய் போற்றி

ஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி

ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி

ஓம் கல்யாண சுந்தரியே போற்றி

ஓம் கனகமணிக்குன்றே போற்றி

ஓம் கற்பின் அரசியே போற்றி

ஓம் கருணை ஊற்றே போற்றி

ஓம் கல்விக்கு வித்தே போற்றி

ஓம் கனகாம்பிகையே போற்றி

ஓம் கதிரொளிச் சுடரே போற்றி

ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி

ஓம் காட்சிக்கு இனியோய் போற்றி

ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி

ஓம் கிளி ஏந்திய கரத்தோய் போற்றி

ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி

ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி

ஓம் கூடற்கலாப மயிலே போற்றி

ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி

ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி

ஓம் சக்தி வடிவே போற்றி

ஓம் சிவகாம சுந்தரியே போற்றி

ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

ஓம் சிவயோக நாயகியே போற்றி

ஓம் சிவானந்தவல்லியே போற்றி

ஓம் சிங்காரவல்லியே போற்றி

ஓம் செந்தமிழ் தாயே போற்றி

ஓம் செல்வத்துக்கரசியே போற்றி

ஓம் சேனைத்தலைவியே போற்றி

ஓம் சொக்கர் நாயகியே போற்றி

ஓம் சைவ நெறி நிலைக்கச் செய்தோய் போற்றி

ஓம் ஞானாம்பிகையே போற்றி

ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி

ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி

ஓம் தண்டமிழ்த் தாயே போற்றி

ஓம் திருவுடையம்மையே போற்றி

ஓம் திசையெலாம் புரந்தாய் போற்றி

ஓம் திரிபுரசுந்தரியே போற்றி

ஓம் திருநிலை நாயகியே போற்றி

ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி

ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி

ஓம் தென்னவன் செல்வியே போற்றி

ஓம் தேன்மொழி அம்மையே போற்றி

ஓம் தையல் நாயகியே போற்றி

ஓம் நற்கனியின் சுவையே போற்றி

ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி

ஓம் நல்ல நாயகியே போற்றி

ஓம் நீலாம்பிகையே போற்றி

ஓம் நீதிக்கரசியே போற்றி

ஓம் பக்தர் தம் திலகமே போற்றி

ஓம் பழமறையின் குருந்தே போற்றி

ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி

ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி

ஓம் பவளவாய்க் கிளியே போற்றி

ஓம் பல்லுயிரின் தாயே போற்றி

ஓம் பசுபதி நாயகியே போற்றி

ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி

ஓம் பாண்டிமாதேவியின் தேவே போற்றி

ஓம் பார்வதி அம்மையே போற்றி

ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி

ஓம் பெரிய நாயகியே போற்றி

ஓம் பொன்மயில் அம்மையே போற்றி

ஓம் பொற்கொடி அன்னையே போற்றி

ஓம் மலையத்துவசன் மகளே போற்றி

ஓம் மங்கள நாயகியே போற்றி

ஓம் மழலைக்கிளியே போற்றி

ஓம் மனோன்மணித் தாயே போற்றி

ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி

ஓம் மாயோன் தங்கையே போற்றி

ஓம் மாணிக்கவல்லியே போற்றி

ஓம் மீனவர்கோன் மகளே போற்றி

ஓம் மீனாட்சி அம்மையே போற்றி

ஓம் முழுஞானப் பெருக்கே போற்றி

ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி

ஓம் யாழ்மொழி அம்மையே போற்றி

ஓம் வடிவழகு அம்மையே போற்றி

ஓம் வேலனுக்கு வேல் தந்தோய் போற்றி

ஓம் வேதநாயகியே போற்றி

ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி

ஓம் அம்மையே அம்பிகையே போற்றி போற்றி

ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி போற்றி

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...