Skip to main content

அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயில், சங்கரன்கோவில்

சங்கன் என்னும் நாக அரசன் சிவன் மீதும், பதுமன் என்ற அரசன் திருமால் மீதும்  பக்தி கொண்டிருந்தனர்.  இருவருக்கும் அடிக்கடி சிவன் பெரியவரா? திருமால் பெரியவரா? என்ற  வாதம் எழுந்தது.  தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர்.  இருவரும் சம சக்தி  கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி  அம்பாள் தவமிருந்தாள்.  இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி  தந்தனர்.  பின்னர், அம்பிகையின் வேண்டுதலுக்காக சிவன், சங்கர லிங்கமாகவும்  எழுந்தருளினார்.  நாகராஜாக்கள் இருவரும் சங்கர லிங்கத்தை வழிபட்டு வந்தனர்.  காலப் போக்கில் இந்த லிங்கத்தை  புற்று மூடி விட்டது.  நாகராஜாக்களும் அதனுள்ளேயே இருந்தனர்.  பக்தர் ஒருவர் இந்த புற்றை  இடித்தபோது, உள்ளிருந்த நாகத்தின் வாலை வெட்டிவிட்டார்.  அதனால் ரத்தம் வெளிப்பட்டது.    அதிர்ந்தவர் புற்றுக்குள் பார்த்தபோது லிங்கத்தைக் கண்டார்.  தகவல், பாண்டிய மன்னனுக்கு  சென்றது.  லிங்கம் இருந்த இடத்தில் அவன் கோயில் எழுப்பினான்.

கோமதி அம்மன் சன்னதி முன் சக்கரம் ஒன்று உள்ளது அதில் உட்கார்ந்து தியானம் செய்தால் நினைத்து நடக்கும் என்பது நம்பிக்கை. அம்பாள் சன்னதிக்கும், சாமி சன்னதிக்கும் நடுவில் சிவன் பாதி, விஷ்ணு பாதி சேர்ந்து இருப்பது விஷேசம் இங்கு நாகசுனை தீர்த்தம் உள்ளது.ஸ்தல விருட்சம் புன்னை மரம் ஆகும். பஞ்ச தலங்களில் இது பிருதிவிதலம் (மண் தலம்). அருள்மிகு சங்கரநாராயணசுவாமி, அருள்மிகு சங்கரலிங்க சுவாமி, அருள்தரும் கோமதி அம்மன் ஆகிய தெய்வஙகள் அமைந்து உள்ளது.

இங்கு உள்ள  புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது.  புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன்  பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள்.  பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை  உலகறியச் செய்தார்.  இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.  மார்ச் மாதம்  21, 22, 23, ஆகிய நாட்களிலும், செப்டம்பர் மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும் சூரியன் உதிக்கும்  போது, அதன் ஒளி சங்கரலிங்கர் மீது விழுவதை இன்றும் காணலாம்.  சூரிய பகவான் சங்கரலிங்கரை இந்நாட்களில் வழிபட்டு வருகிறார்
திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணர் திருக்கோயில் அமைந்து உள்ளது.

கோயிலில் ஆடித்தபசு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக நடைபெறும். சைவ, வைணவ சமய பேதங்களைக் கடந்து, சமரசத்தை நிலைநாட்டும் ஸ்தலமாக, திகழ்கிறது.

இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில், அம்பாள் தவத்தின் பயனாக, சுவாமி திருக்காட்சி அளிக்கும் வைபவம் ஆடித் தபசு திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.


Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...