Skip to main content

ஶ்ரீ ஹனுமான்

ஓம் அனுமனே போற்றி
ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அவதார புருஷனே போற்றி
ஓம் அறிஞனே போற்றி
ஓம் அடக்கவடிவே போற்றி
ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
ஓம் ஆனந்த வடிவே போற்றி
ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
ஓம் இசை ஞானியே போற்றி
ஓம் இறை வடிவே போற்றி
ஓம் ஒப்பிலானே போற்றி
ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
ஓம் களங்கமிலாதவனே போற்றி
ஓம் கர்மயோகியே போற்றி
ஓம் கட்டறுப்பவனே போற்றி
ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
ஓம் கடல் தாவியவனே போற்றி
ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
ஓம் கீதாபாஷ்யனே போற்றி
ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
ஓம் கூப்பிய கரனே போற்றி
ஓம் குறுகி நீண்டவனே போற்றி
ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
ஓம் சீதாராம சேவகனே போற்றி
ஓம் சூராதி சூரனே போற்றி
ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
ஓம் சொல்லின் செல்வனே போற்றி
ஓம் சூரியனின் சீடனே போற்றி
ஓம் சோர்வில்லாதவனே போற்றி
ஓம் சோக நாசகனே போற்றி
ஓம் தவயோகியே போற்றி
ஓம் தத்துவஞானியே போற்றி
ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
ஓம் தீதழிப்பவனே போற்றி
ஓம் தீயும் சுடானே போற்றி
ஓம் நரஹரியானவனே போற்றி
ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
ஓம் பண்டிதனே போற்றி
ஓம் பஞ்சமுகனே போற்றி
ஓம் பக்தி வடிவனே போற்றி
ஓம் பக்த ரட்சகனே போற்றி
ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
ஓம் பயம் அறியாதவனே போற்றி
ஓம் பகையை அழிப்பவனே போற்றி
ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
ஓம் பிரம்மச்சாரியே போற்றி
ஓம் பீம சோதரனே போற்றி
ஓம் புலனை வென்றவனே போற்றி
ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
ஓம் மதி மந்திரியே போற்றி
ஓம் மனோவேகனே போற்றி
ஓம் மாவீரனே போற்றி
ஓம் மாருதியே போற்றி
ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
ஓம் மூலநட்சத்திரனே போற்றி
ஓம் மூப்பில்லாதவனே போற்றி
ஓம் ராமதாசனே போற்றி
ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
ஓம் ராமதூதனே போற்றி
ஓம் ராம சோதரனே போற்றி
ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
ஓம் ராமாயண நாயகனே போற்றி
ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
ஓம் ராகவன் கண்மணியே போற்றி
ஓம் ருத்ர வடிவனே போற்றி
ஓம் லட்சியப் புருஷனே போற்றி
ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
ஓம் லங்கா தகனனே போற்றி
ஓம் லங்காவை வென்றவனே போற்றி
ஓம் வஜ்ர தேகனே போற்றி
ஓம் வாயுகுமாரனே போற்றி
ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
ஓம் விளையாடும் வானரனே போற்றி
ஓம் விஸ்வரூபனே போற்றி
ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
ஓம் வித்தையருள்பவனே போற்றி
ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...