Skip to main content

சபரிமலை

சுவாமியே சரணம்                                                                                ஐயப்பன் சரணம்

             பந்தள நாடு என்பதும் ஒன்றாகும். இந்த பந்தள நாட்டை பாண்டிய வம்சத்தில் தோன்றிய ராஜசேகர பாண்டியன் ஆண்டு வந்தான். இவன் வீர தீர பராக்கிரமத்தில் மிகவும் வல்லவன். முறையாக நாடாண்ட இவனது ஆட்சியில் மக்கள் எவ்வித குறைபாடுமின்றி வாழ்ந்து வந்தனர். அழகிய ராணியும், அன்பான குடிமக்களும், ஆண்டனுபிக்க பெருஞ்ச் செல்வமும் இருந்த போதிலும் தனக்குப் பின் தன் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என்ற பெருங்குறை அந்த மன்னனுக்கு இருந்தது.
     பண்டைய திருவிதாங்கூரில் 

                  பந்தள நாட்டு குடிமக்களும், அன்பே வடிவான தன மன்னனுக்கு பிள்ளைச் செல்வம் இல்லையே என்று பெரிதும் வருந்தினர். சிவ பக்தனான மன்னன் இராஜசேகரனும், இராணியும் தங்களுக்கு வாரிசு வேண்டி சிவபெருமானை தினமும் வழிபட்டு வந்தனர். மன்னன் மீது மாறாத அன்பு கொண்ட மக்களும் மன்னனுக்கு வாரிசு வேண்டி சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.

                    அரம்பன் என்ற அரக்கனுடைய மகன்  மஹிஷாசுரன் பிரம்மாவை நோக்கி நீண்ட காலமாக கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை கலைக்கப் பெரிதும் முயன்றும் முடியாமல் போகவே, இறுதியில் பிரம்மா அவன் முன்பு தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார்.இந்த பூமியில் பிறந்த யாரும் என்னை கொள்ளாதிருக்கும் வரம் வேண்டும் எனக் கேட்டான். பிரம்மாவும் அவன் கேட்ட வரத்தை கொடுத்தார். அவன் தான் பெற்ற வரத்தை மூன்று லோகங்களிலும் தவறாக பயன்படுத்தி பல கொடுமைகள் செய்தான்.

                    அவனது கொடுமை தாங்கமுடியாத தேவர்கள் பிரம்மா, விஷ்ணு, சிவனிடம் கூறினார்கள். ஆனால் அவர்கள் தங்களால் முடியாது என்று மூன்றுபேரும் தம்தம் சக்திகளை ஒன்றாக்கி சண்டிகாதேவியை படைத்தது அவனை போரிட்டு அழிக்க கூறினார்.

                  அரம்பனின் சகோதரன் கரம்பனுடைய புத்திரி மகிஷி  தன்னுடைய சகோதரன்  அழிவுக்கு காரணமாக இருந்த தேவர்களை பழிவாங்க முடிவெடுத்து அதற்கான சக்தியை பெற பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் செய்தாள். பிரம்மதேவனிடம் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த புத்திரனால் மட்டுமே தனக்கு மரணம் வரவேண்டும் என கேட்டாள். பிரம்மனும் அவ்வாறே வரம் கொடுத்தார்.

                 துர்வாசர் சாபத்தால் தேவருக்கு நரை ஏற்பட்டதால் பாற்கடலை கடைய முடிவு செய்தனர். அமிர்தம் வந்தவுடன் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சமமாக பங்கிடுவதற்காக விஷ்ணு மோகினி வடிவு எடுத்தார். இதைக்கண்ட சிவன் அவள் அழகில் மயங்கினார். இதனால் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

      
           அந்த குழந்தைக்கு ஒரு மணிமாலை அணிவித்து பந்தள மன்னன் வரும் கோவிலின் அருகில் விட்டுச் சென்றனர்.குழந்தையின் ஆளுகுரலை கேட்ட   மன்னன் அதன் அருகில் சென்றான்.ஒரு முனிவர் இந்த குழந்தை தேவ குழந்தை இவனின் பன்னிரெண்டாம் வயதில் இவன் யார் என்று தெரியும்.

                பிள்ளையில்லாத குறையினால் ராணி குழந்தையை வளர்த்தாள். அவனுக்கு மணிகண்டன் என பெயரிட்டார்கள். பின் ராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மணிகண்டன் குருவிடம் நன்றாக விதைகளை கற்றான். அவனின் திறமையை பார்த்த குரு இவனிடம் தன்னுடைய மகனுக்கு பார்வையும் பேச்சித்திறனும் கொடுக்க வேண்டும் எனு கேட்டதற்கு பகவான் கொடுத்தார்.

                 திவானின் திட்டப்படி ராணி தனக்கு தலைவலி இருப்பதாக் கூறினாள். திவானின் திட்டப்படி வைத்தியரும்  புலிப்பால் மட்டுமே குணமாக்கும் என கூறினான். புலிப்பால் கொண்டுவருபவருக்கு தன நாட்டில் பத்தியை தருவதா பறைச்சாற்றினான். எவரும் வராததினால்  மணிகண்டன் காட்டுக்கு சென்று மகிஷியை கொன்று தேவர்களை காத்தருளினார்.

       தேவர்கள் புலியாக மாறி மணிகண்டனுடன் வருவதை பார்த்து மக்கள் பயந்தனர். மணிகண்டன் புலிப்பால் கொண்டு வந்துள்ளேன் கறந்து கொடுங்கள் என்று கூறினார்.மன்னன் பன்னிரண்டு வயது இன்றுடன் முடிகிற்து. மன்னன் தன்னை மன்னிக்கும் படி கூறினார். மணிகண்டன் தான் வந்தவேலை முடிந்தது.இனி நான் தேவலோகம் செல்கிறேன் என்று ஒரு அம்பை எய்தார் அது விழும் இடத்தில் தனக்கு பதினெட்டு படிகள் கொண்ட ஒரு கோவில் கட்ட சொல்கிறார். பக்கத்தில் மாளிகைப்புரத்தம்மாவுக்கு கோவில் கட்ட சொல்கிறார்.
                  

                     மணிகண்டன் கட்டளைப் படி கோவில் கட்டுகிறார். ஆண்டுதோறும் லட்சோப மக்கள் 41 நாள் மாலை அணிவித்து விரதம் இருந்து பூஜைக்குரிய நெய் தேங்காய், பொருட்கள் வாங்கி ய்யப்பனின் சரணங்களை விழித்து செல்கின்றாகள்.சங்கராந்தி அன்று ய்யப்பனின் ஜோதி வடிவில் காட்சிதருகிறார்.



படங்கள் : கூகிள் நன்றி.
                   

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...