Skip to main content

Posts

Showing posts from September, 2017

அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில்

ஒருமுறை பிரளயம் ஏற்பட்ட காலத்தில் பெரு வெள்ளம் இந்த ஊரை அணுகாமல் வெளியே நின்றுவிட்டது. பிரளயத்திற்கு புறம்பாய் இருந்தமையால் இத்தலம் திருப்புறம்பியம் என்ற பெயர...

சேரன்மாதேவி - சந்திரன்

உரோமச முனிவர் தாமிரபரணி தென்கரையை அடைந்து, அங்கு ஆலமரத்தடியில் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்த போது, சிவபெருமான் முனிவருக்குக் காட்சி கொடுத்ததார்.  நவகயிலாயத்தில் இரண்டாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சந்திரன் அம்சமாக விளங்குகிறார். அம்மைநாதர் திருவாயில், ஆவுடையம்மன் திருவாயில் என்று இரண்டு பெரிய வாயில்கள் உள்ளன. வடக்குப் பகுதி அம்மைநாதர் சந்நிதி. தெற்குப்பகுதி ஆவுடையம்மன் திருத்தளி. கோயில் நந்தி, கொடிமரங்கள் உள்ளன. தென்பகுதியில் நடராஜர், சிவகாமி, காரைக்கால் அம்மையார் உள்ளனர்.  கோயில் மணிமண்டபத் தூணில் உரோமச முனிவர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெற்குத்தும் காட்சி வடக்கு ஒரத்தூணில் உள்ளது. அக்காளும், தங்கையும் நெற்குத்திய கூலியைக் கொண்டு இந்தக் கோயிலைக் கட்டியதாக கூறப்படுகிறது. யாச முனிவருக்கு அருள்பாலித்த யாச தீர்த்தம் இந்த கோயிலுக்கு அருகில் உள்ளது. கோயிலுக்கும் யாச தீர்த்தத்துக்கும் நடுவில் ஒரு பாறை உள்ளது. அதற்கு ரணவிமோசனப் பாறை என்று பெயர். இந்த தீர்த்தத்தில் நாற்பத்தோரு நாட்கள் தொடர்ந்து நீராடினால் எல்லாவித நோயும் தீரும் இக்கோயிலில் ஐ...

தென்திருப்பேரை - புதன்

நவகயிலாயத்தில் ஏழாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் புதன் பகவான் அம்சமாக விளங்குகிறார். இறைவன் சிறிய லிங்க வடிவில், தாமரை மலரில் காட்சி தருகிறார். ஒரு முறை கோயிலுக்கு வந்த அந்த காலத்து ஆங்கிலேய கலெக்டர், கோயில் தென்னைமரத்திலிருந்து இளநீர் பறித்துக் கொண்டு வரச் சொன்னாராம். 'சிவன் சொத்து பறிக்கக் கூடாது' என்று ஊர் மக்கள் கூறினார்களாம். அதற்கு அவர் கோயில் இளநீருக்கென்ன கொம்பா முளைத்திருக்கிறது. பறித்துக் கொண்டு வா! என்று தனது சேவகனுக்குக் கட்டளையிட அவனும் அவ்வாறே பறித்து போட்டானாம். அதை எடுத்து பார்த்து அவர் அதிர்ந்து விட்டார். அதில் மூன்று கொம்புகள் இருந்ததைக் கண்டு கலெக்டர் பயந்து போய், சுவாமி கோயிலுக்குச் சென்று வணங்கி மன்னிப்புக் கேட்டாராம். பொதுமக்கள் தொட்டுப் பார்த்ததில் இரண்டு கொம்புகள் ஒடிந்து விழுந்து விட்டன. இப்போது ஒரு கொம்பு மட்டுமே உள்ளது. அம்பாள் சந்நிதி முன் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது.  இந்த ஊருக்கு பேரெயில் என்ற பெயரும், திருப்பேர் என்ற பெயரும் உள்ளது. இந்த கோயிலின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூணில் முதலாம் குலோத்துங...

ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்

நவகயிலாயத்தில் ஆறாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சனி பகவான் அம்சமாக விளங்குகிறார்.  "தோமாம் பொழிலுடுத்த தென் வைகுந்தக் கயிலை"  என்கிறார் குமரகுருபர சுவாமிகள். நவதிருப்பதி நாயகரின் பெயர் வைகுண்டபதி. நவ கைலாயபிரானின் பெயர் கைலாசநாதர் சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கைலாச நாதர் சுயம்புலிங்கம். கோயிலின் உட்புறத்தில் கிழக்கில் திருக்கல்யாண மண்டப விதானத்தில் மூலிகைகளால் வரையப்பட்ட நவ கைலாய ஓவியங்கள் உள்ளன. நந்தவனத்துக்குச் செல்லும் முன்மண்டபத்தில் உரோமச முனிவர் வடிவமைக்கப்பட்டுள்ளார். வடக்குப் பகுதியில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்பிகையும் உள்ளனர். இங்கு கைலாசநாதர், சிவகாமி அம்மை, விஸ்வநாதர், விசாலாட்சி, அம்பிகை ஆகியயோரின் கருவறைகளின் மேல் அழகான விமானங்கள் உள்ளன.  இக்கோயிலில் பூதநாதர் உள்ளார். இவர் இந்தக் கோயிலின் காவல் தெய்வம் மட்டுமல்ல இந்த ஊர் மக்களின் காவல் தெய்வம் சாஸ்தாவும் ஆவார். நவக்கிரகங்களும் இந்தக் கோயிலில் உள்ளன. இந்த கோயிலின் காவல் தெய்வங்களான அக்னி பத்ரர், வீரபத்ரர் சிற்பங்கள் வணங்கத்தக்கவை. கோயில் சந்...

ராஜபதி - கேது

நவகயிலாயத்தில் எட்டாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் கேது அம்சமாக விளங்குகிறார்.  இத்தலத்தின் அருகே ராஜமாளிகை ஒன்று உள்ளதால் இத்தலம் ராஜபதி என பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. மேலும் மதுரையை ஆண்ட சந்திரகுலபாண்டிய மன்னனால் இத்தலம் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. தென்திருப்பேரை கிராமத்தின் எல்லைக்கு அருகிலுள்ள, மணத்தி என்ற கிராமத்திலுள்ள, குட்டித்தோட்டம் உடைமரக்காட்டில் இடிபாடான கோயில் ஒன்று உள்ளது. இக்கோயில் தென்திருப்பேரை கைலாச நாதர் கோயிலைப் போன்று உள்ளது மேலும் ராஜபதியில் உள்ள ஒற்றைக்கல் தென்திருப்பேரை கோயில் தேவதான நிலத்தின் எல்லைக்கல் என்பது இவர்களது கருத்து. ஆனாலும், ராஜபதியில் உள்ள எல்லைக்கல்லையே இன்றும் சிவலிங்கமாக கருதி வழிபட்டு வருகின்றனர். திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் தென்திருப்பேரை அருகில் மணத்தி என்ற கிராமத்திலிருந்து வடக்கில் 1 கி.மீ தொலைவில் ராஜபதி உள்ளது தாமிரபரணி நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இந்த கோயில் அழிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் : கைலாசநாதர் அம்பிகை : பொன்னம்மை...

பாபநாசம் - சூரியன்

சிறுவயதில் அண்ணன், தங்கை தனித்தனியே பிரிந்து சென்றனர். விதிவசத்தால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்தனர். யாரென்று தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு உறவு தெரிந்தது. செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடி கறுப்புப் போர்வையைச் சுற்றிக் கொண்டு முனிவர்களாகப் பல புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட்டனர்.  ஒருநாள் இறைவன் அவர்கள் கனவில் தோன்றி இந்த கறுப்புப் போர்வை எந்தத் தலத்தில் வெள்ளைப் போர்வையாக மாறுகிறதோ, அங்கு உங்கள் பாவம் நீங்கி முக்தி கிடைக்கும் என்றார். பாவநாசம் தாமிரபரணி படித்துறையில் அவர்கள் நீராடியதும், கறுப்புப் போர்வை வெண்போர்வையாக மாறியது. அவர்கள் பாவம் நீங்கியது. ஆதலால் இந்த தலத்துக்கு பாவநாசம் என்று பெயர் வந்தது. இத்தலத்தில் அகத்தியர் போன்ற பல முனிவர்கள் தங்கித் தவம் புரிந்த இடம். நவகயிலாயத்தில் முதன்மையாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சூரிய அம்சமாக விளங்குகிறார்.  விராட புருஷன் வழிபாடு செய்ததால் லிங்கத்திற்கு 'வயிராச லிங்கம்' என்று பெயர். ரிக், யஜுர், சாமம் ஆகிய மூன்று வேதங்களும் மூன்று களாமரங்களாக நின்றதாலும், அதர்வன வேதம் வாயுவாக, சுவாமி...

முறப்பநாடு - குரு

நவகயிலாயத்தில் ஐந்தாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் குரு பகவான் அம்சமாக விளங்குகிறார். முறம்பு என்ற சொல்லுக்கு பருக்கைக் கற்கள் நிரம்பிய மேட்டு நிலம் என்று பொருள். சூரபத்மனைச் சேர்ந்த அசுரர்களின் அட்டூழியங்களைத் தாங்க முடியாத முனிவர்கள் இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் முறப்பநாடு என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தவிர ஊருக்கு அருகிலுள்ள முறப்பேஸ்வரர் கோயிலின் பெயரே இவ்வூருக்கு வந்தது என்றும் கூறுவார்கள். இப்பகுதியில் தாமிரபரணி ஆறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்கிறது. காசியில் கங்கை இதுபோல் செல்வதால் இந்த நதிக்கு தட்சிண கங்கை என்று பெயர். இதனால் இங்கு நீராடுவது கங்கையில் நீராடுவதற்குச் சமம் என்கிறார்கள். ஆற்றின் மேற்குக் கரையில் கோயில் உள்ளது அதற்கு எதிரில் கிழக்கில் ஆற்றுக்குள் ஒரே கல்லில் பத்து உருவங்கள் பொறிக்கப்பட்ட சிலைகள் உள்ள தசாவதாரக் கட்டமும், காசிக் கட்டமும், சவரி தீர்த்தமும் இங்கு உள்ளன. இந்தக் கோயிலைக் கட்டியவர் வல்லாள மகாராஜர். மிருகண்ட முனிவர் பாதயாத்திரை செய்த இடம் என்றும். காஞ்சன மாலைக்கு மோட்சம் கிடைத்த இடம் என்றும் தல வரலாறு கூறுகிறது.  சோழ...

மண்டைக்காடு பகவதியம்மன் கோயில்

சங்கராச்சாரியார் கேரள சீடர்களோடு வந்து ஸ்ரீ சக்கரம் வைத்து பூஜை செய்கின்றார். தினமும் தான் தங்கியிருந்த குடிலில் இருந்து ஸ்ரீ சக்கரம் இருந்த இடத்தில் பூஜை செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் ஸ்ரீ சக்கரம் திரும்ப வரவே இல்லை. எடுத்துப் பார்த்தும் திரும்ப வரவில்லை.இந்த இடத்திலேயே இருந்து சித்து விளையாட்டுக்கள் நடத்தி மண்ணுக்குள் சமாதி ஆகிவிட்டார். அந்த ஸ்ரீசக்கரம் இருந்த இடத்தின் மேல் புற்று வளர்ந்து வருகிறது. அந்த இடத்தில் சிறுவர்கள் விளையாடும்போது தடுக்கி ரத்தம் வருகிறது. இந்த விசயம் அப்பகுதியில் இருக்கும் கேரள மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு தெரிவிக்கப் பட்டது. அவரும் அந்த இடத்தில் சிறு குடில் கட்டி வழிபாடு நடத்தினார்.  இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகின்றது . ஆண்கள் சபரி மலைக்கு இருமுடி கட்டி செல்வதுபோல் இங்கு பெண்கள் இருமுடி கட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொள்கின்றார்கள்.இங்கு வருடத்தில்  10  நாட்கள் திருவிழா ,  எட்டாம் கொடை மற்றும் பரணி   கொடை சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. 15  அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக்கொண்டிருக்கும் புற்று ...

கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில்

கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மன் கோயில் தென் தமிழகத்தில் உள்ள தேவி கோயில்களில் தனிச்சிறப்பு பெற்றது. இக்கோயில் குமரி மாவட்டத்தில் அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. தமிழக - கேரள எல்லையோரத்தில் உள்ளது.  இக்கோயிலில் வழிபாட்டு முறைகள் கேரள கலாச்சாரத்தை ஒத்துள்ளது. கொல்லங்கோடு ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒரே வழிபாட்டு முறை கொண்ட அம்மனுக்கு இங்கு மட்டுமே இரண்டு கோயில்கள் உள்ளது மற்றுமொரு சிறப்பாகும்.  கொல்லங்கோடு கண்ணனாகம் ஜங்ஷனில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 500 மீட்டருக்கு அப்பால் வட்டவிளையில் மூலகோயிலும் ,  கண்ணனாகத்தில் இருந்து கிழக்கு நோக்கி 0.5 கி. மீட்டருக்கு அப்பால் வெங்கஞ்சியில் திருவிழா கோயிலும் அமைந்துள்ளது.    ஒவ்வொரு வருடமும் பங்குனி பரணியை முன்னிட்டு 10 நாட்கள் நடக்கும் தூக்க திருவிழாவிற்காக அம்மன் மூலகோயிலில் இருந்து வெங்கஞ்சி திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுவார். இதேப்போன்று ஆண்டுதோறும் மகரவிளக்கை முன்னிட்டு 41 நாட்கள் நடக்கும் மண்டலகால சிறப்பு பூஜைக்கும் அம்மன் எழுந்தருளுவார். இந்த பூஜை இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை வெங்கஞ்ச...

உவரி சுயம்புலிங்க சுவாமி

திருநெல்வேலி மாவட்டம், உவரி என்னுமிடத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுயம்புலிங்கசுவாமி திருக்கோயில்.  பால்காரர் ஒருவர் அருகேயுள்ள கூட்டப்பனை என்ற இடத்திலிருந்து இப்பகுதிக்கு தினமும் பால் விற்று வருவாராம். தினமும் அவர் உவரி வழியாகத் தான் செல்வாராம். தற்போது சுவாமி இருக்கும் இடத்தருகே வந்ததும் கால் இடறி விழுந்து விடுவாராம். இதற்கு என்ன காரணம் என்று அவருக்கு விளங்கவில்லை. சற்று யோசித்தபின்னர், அங்குள்ள கடம்ப மரத்து வேர் தடுக்குவதால்தான் கால் இடறுகிறது என்பதை உணர்ந்திருக்கிறார். அதனால் அம்மரத்தின் வேரை வெட்டி அகற்ற எண்ணிய அவர், அந்த வேரை வெட்டத் துவங்கியபோது திடீரென்று ஒரு இடத்தில் ரத்தம் பீறிட்டதாம். அதேசமயம், இறைவனும் அசரீராக வந்து, அந்த இடத்தில் தான் குடிகொண்டிருப்பதாகவும் தனக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தும்படியும் கூறினாராம். இறைவனுடைய ஆணையை ஏற்று அங்கு முதலில் பனை ஓலையில் கோயில் கட்டினார்களாம். நாளடைவில் அந்த கோயில் பெரிய அளவில் உருப்பெற்றதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் கருவறையில் சுயம்புலிங்கசுவாமியாக அருள்பாலிக்கின்றார் இறைவன்! 

மேல் மலையனூர் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி

ஆதி சக்தியான பிரம்மாண்ட நாயகி, சத்தியமங்கலம் கொமாரபாளையத்தில் அங்காள பரமேஸ்வரியாக அருள்பாலித்து கருணைத் தாயாக வீற்றிருக்கின்றாள். இதற்காக அவ்விடத்தை அன்னையே தேர்ந்தெடுத்து கோவில் கொண்டு வீற்றிருக்கின்றாள் என்பது மிகவும் அதிசயமான அற்புதமான அருள் வரலாறு ஆகும். சுமார் 600 வருடங்களுக்கு முன்னால் நான்கு அன்பர்கள், மைசூரில் அங்காள பரமேஸ்வரியின் ஆழ்ந்த பக்தர்களாக இருந்தனர். கேட்பவர்களுக்கெல்லாம் கேட்கும் வரம் தரும் இந்த அன்னைக்கு நாமே ஓர் ஆலயம் கட்டலாமே என்று அன்னையின் அருளால் தீர்மானித்தனர். அதற்காக மூல சக்தியாக விளங்கும் மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியை அழைத்து வர வேண்டும். அவளின் சக்தி அம்சமாக விளங்கும் புற்றிலிருந்து மண் எடுத்து வந்து, அதோடு மேல் மலையனூரிலேயே சிலையை வடித்துத் கொண்டு வந்து அந்த மூல ஆற்றலோடு கோவில் கட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்டார்கள். அதற்குக் காரணம் மேல் மலையனூரின் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி, மூல சக்தி என்பது மட்டுமல்ல, 54 சக்தி பீடங்களில் தாட்சாயிணியின் வலது பாகம் வீழ்ந்த இடத்தில் குடி கொண்டவளே மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி. அதனால் தான் அவள் சக்தியை அவள் அருளோட...

திருப்பதி

ஆந்திரமாநிலம் சித்தூர்மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர்  ஏழுமலையான்  என்றும் அழைக்கப்படுகிறார். இத்தளத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார்.  மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும்.  பிருகு போன்ற முனிவர்கள் யாகம் செய்தார்கள். அந்த யாகத்தின் பலனை சாந்தமான மூர்த்தியொருவருக்கே அளிக்க வேண்டுமென எண்ணி  மும்மூர்த்திகளில் திருமாலின் இருப்பிடத்திற்கு சென்றார். பிருகு முனிவரின் வருகையை அறியாது உறங்கிக் கொண்டிருந்த திருமாலின் மார்பில் எட்டி உதைத்தார். அதனால் திருமாலின் இதயத்தில் இருந்த திருமகள் கோபம் கொண்டு அவரிடமிருந்து சென்றார். திருமால் பூமியில் திருமகளைத் தேடிவேங்கட மலையில் ஓரிடத்தில் தவமிருந்தார். அவரைச் சுற்றி புற்று உருவானது. அப்புற்றில் தவமிருந்த திருமாலின் மீது ப...

நாகர்கோவில்

                     பாம்பு மே காடு ( திருச்சூர், கேரளா ) நம்பூதிரி வாசுகி உபதேசித்த பத்து சிகிச்சை, விஷ சிகிச்சை செய்து கொண்டு இருந்தார்.ஒருநாள் தமிழ்நாட்டு ராஜாவுக்கு பத்து நோய் வந்தது.அவர் எங்கு  வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. நம்பூதிரி வாசுகி பற்றி தெரிந்து அவரை சிகிச்சை செய்ய அழைத்தார்.                        அவரும் சிகிச்சை செய்து விட்டு நாகர்கோவில் வழியாக காட்டு பாதையில் வருகிறார். அப்போது ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பி பார்க்கிறார். அங்கு அழுது கொண்டிருந்த பெண்ணிடம் காரணம் கேட்கிறார். அந்தப்பெண் தான் காட்டில் புல் அறுத்து கொண்டிருக்கும் போது ஐந்து தலை கொண்ட நாக சிலையில் என் அரிவாள் பட்டு ரத்தம் வழிகிறது. இது சாதாரண சம்பவம் இல்லை என சொல்கிறாள்.                     நம்பூதிரி தன் மந்திர சக்தியால் நாகத்தை வேண்டி வந்த ரத்தத்தை நிறுத்துகிறார். இங்கு ஆனந...

சபரிமலை

சுவாமியே சரணம்                                                                                  ஐயப்பன்  சரணம்               பந்தள நாடு  என்பதும் ஒன்றாகும். இந்த பந்தள நாட்டை பாண்டிய வம்சத்தில் தோன்றிய ராஜசேகர பாண்டியன் ஆண்டு வந்தான். இவன் வீர தீர பராக்கிரமத்தில் மிகவும் வல்லவன். முறையாக நாடாண்ட இவனது ஆட்சியில் மக்கள் எவ்வித குறைபாடுமின்றி வாழ்ந்து வந்தனர். அழகிய ராணியும், அன்பான குடிமக்களும், ஆண்டனுபிக்க பெருஞ்ச் செல்வமும் இருந்த போதிலும் தனக்குப் பின் தன் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என்ற பெருங்குறை அந்த மன்னனுக்கு இருந்தது.      பண்டைய திருவிதாங்கூரில்                    பந்தள நாட்டு குடிமக்களும், அன்பே வடிவான தன மன்னனுக்கு பிள்ளைச் செல்வம் இல்லையே என்று பெரிதும் வ...

சிவகாசி

பாண்டிய மன்னன் தமிழகத்தின் வடக்கு பகுதி காசியில் உள்ள ஒரு சிவலிங்கத்தை எடுத்து வந்து தெற்கே பிரதிஷ்டை செய்ய நினைத்தான். அவ்வாறு செய்வதற்கு தன் மனைவியையும், பணியாட்களையும் அழைத்து காசிக்கு சென்றார். அங்கு ஒரு சிவலிங்கத்தை எடுத்து வரும் வழியில் சிவலிங்கத்தை சுமந்து வந்த காளை மாடு ஒரு இடத்தில் நின்றது. அது அங்கு இருந்து நகரவில்லை. அப்பொழுது உடன் வந்த தன் மனைவிக்கு கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் அங்கே தங்க வேண்டியதாகியது. அதனால் காளை மாட்டின் மீது வைத்துள்ள சிவலிங்கத்தை அங்கே வைத்து பூஜை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த இடம் சிவகாசி ஆகும்.

குலசை முத்தாரம்மன்

பாண்டிய நாட்டில் சிறப்புற்று விளங்குவன முத்துக்கள். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை குவித்து தேவியாக பாவித்து வழிபட்டனர். அம்முத்துக்கள் அம்பாளாக திருமேனி கொண்டன. முத்துக்களில் இருந்து அன்னை உதித்ததால் முத்தாரம்மன் என அழைக்கப் பட்டாள். பாண்டியர்கள் முத்துக்களை மாலையாக தொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அன்னை முத்தாரம்மன் என்றும் வழங்கினாள். இங்கே அம்பாள் தானே தோன்றி உலகத்தை காப்பாற்றி வருகிறாள். மேலும்  இங்கே அம்மையும் அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளாள். நாம் அம்பாளுக்கு கீழே உள்ள பீடம் தானாக தோன்றிய சுயம்பு ஆகும். இது உளி கொண்டு செதுக்கப்படாதது. அம்பாள் கோவில் அர்ச்சகர் கனவில் தோன்றி குமரி மாவட்டம் மைலாடி என்னும் ஊரில் சென்று சிலை செய்ய சொல் எனகூறினாள். அதே சமயம் அம்பாள் சாமியுடன் மைலாடி ஊரில் சிற்பி சுப்பையா ஆசாரி என்பவர் கனவில் தோன்றி எங்கள் வடிவத்தை உற்றுநோக்கு இந்த வடிவத்தை ஒரே கல்லில் ஒரே பீடத்தில் வடித்து குலசையில் கொடு என்றாள். இக்கல் ஆண் பெண் பாறையில் உள்ளது. இப்பாறையிலுள்ள கல்லிலிருந்து வடித்து திருமேனியை கொடுத்து அனுப்பு என கூறி மறைந்தாள்.இ...

திருக்காளத்தி

வாயு திருக்காளத்தி, சித்தூர், ஆந்திரா திருக்காளத்தி - காளஹஸ்தீஸ்வரர் கோயில் சம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும்.  இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பதியில் இருந்து 38 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.  பஞ்சபூதத் தலங்களில் இக்கோவில் வாயுத் தலமாக விளங்குகிறது. கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசன் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவன் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.  ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷ நிவர்த்திக்கான பரிகார பூசைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். பெயர்க் காரணம் --- சீகாளத்தி என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது. இங்கு லிங்கமாக கா...

சிதம்பரம்

ஆகாயம் சிதம்பரம் சிதம்பரம் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் இருக்கும் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர். இதனை ஆலயநகர், நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது. திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராசர் என்ற பெயரில் வீற்றிருக்கும் ஆலயமும்(இவ்வாலயத்தில் சிவகாமியம்மையும் அருள் செய்கிறார்), வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் திருச்சித்திரக்கூடத்தில் வீற்றிருக்கிறார்.  ஏனைய இந்து ஆலயங்களில் லிங்க வடிவமாக இருக்கும் சிவபெருமான், இங்கு நடனமாடும் நிலையில் இருப்பதால், பரதநாட்டியம் என்னும் நாட்டியக்கலைக்கு முதற்கடவுளாக நடராசரை வணங்குகின்றனர். நாற்பது ஏக்கர் பரப்பளவில், நான்கு திசைக்கென ஒரு...

திருவண்ணாமலை

நெருப்பு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். ரமணர் தவமிருந்த தலம் இதுவாகும். இது பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகும். இது நெருப்பிற்கான தலம் ஆகும். நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, வட ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.  சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்ததநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், "அண்ணாமலையானுக்கு அரோகரா" என விண்ணதிர முழக்கமிடுவார்கள். "இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்வைத ஆன்ம ஜோதியைக் காண்பதுதான் இந்த தீப தரிசனம் ஆகும்" என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார். தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் --- பரம்பொருளான சி...

திருவானைக்கா

நீர் திருவானைக்கா, திருச்சி திருவானைக்கா என்ற பெரிய சிவன் கோவில் நகரம் திருச்சிக்கு அருகே அமைந்துள்ளது, இதனை. திருஆனைக்கா, திருவானைக்காவல், திருவானைக்கோவில் என்றும் அழைப்பர். காவேரி ஆற்றுக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட தீவுப்பகுதியில், திருவரங்கத்திற்கு அருகே அமைந்துள்ளது. திருவானைக்கா பஞ்சபூத ஸ்தலங்களில் அப்புஸ்தலம் - நீர்த்தலம் ஆகும். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.  அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம்என்பர். திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். உச்சிக்கால பூ...