"தோமாம் பொழிலுடுத்த தென் வைகுந்தக் கயிலை" என்கிறார் குமரகுருபர சுவாமிகள். நவதிருப்பதி நாயகரின் பெயர் வைகுண்டபதி. நவ கைலாயபிரானின் பெயர் கைலாசநாதர் சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கைலாச நாதர் சுயம்புலிங்கம்.
கோயிலின் உட்புறத்தில் கிழக்கில் திருக்கல்யாண மண்டப விதானத்தில் மூலிகைகளால் வரையப்பட்ட நவ கைலாய ஓவியங்கள் உள்ளன. நந்தவனத்துக்குச் செல்லும் முன்மண்டபத்தில் உரோமச முனிவர் வடிவமைக்கப்பட்டுள்ளார். வடக்குப் பகுதியில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சி அம்பிகையும் உள்ளனர். இங்கு கைலாசநாதர், சிவகாமி அம்மை, விஸ்வநாதர், விசாலாட்சி, அம்பிகை ஆகியயோரின் கருவறைகளின் மேல் அழகான விமானங்கள் உள்ளன.
இக்கோயிலில் பூதநாதர் உள்ளார். இவர் இந்தக் கோயிலின் காவல் தெய்வம் மட்டுமல்ல இந்த ஊர் மக்களின் காவல் தெய்வம் சாஸ்தாவும் ஆவார். நவக்கிரகங்களும் இந்தக் கோயிலில் உள்ளன. இந்த கோயிலின் காவல் தெய்வங்களான அக்னி பத்ரர், வீரபத்ரர் சிற்பங்கள் வணங்கத்தக்கவை. கோயில் சந்தனசபாபதி மண்டபத்தில் யாழித் தூண்கள் உள்ளன. யாளியின் வாயில் உருளும் கல் உருண்டைகள் உள்ளன.
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனிலிருந்து 2 கிமீ தொலைவில் தாமிரபரணி வட கரையில் இக்கோயில் உள்ளது.
மூலவர் : கைலாசநாதர்
அம்பிகை : சிவகாமி அம்மன்
நவகைலாயம்
1.பாபநாசம் - சூரியன்
2.சேரன்மாதேவி - சந்திரன்
3.கோடகநல்லூர் - செவ்வாய்
4.குன்னத்தூர் - இராகு
5.முறப்பநாடு - குரு
6.ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்
7.தென்திருப்பேரை - புதன்
8.ராஜபதி - கேது
9.சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
1.பாபநாசம் - சூரியன்
2.சேரன்மாதேவி - சந்திரன்
3.கோடகநல்லூர் - செவ்வாய்
4.குன்னத்தூர் - இராகு
5.முறப்பநாடு - குரு
6.ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்
7.தென்திருப்பேரை - புதன்
8.ராஜபதி - கேது
9.சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
