Skip to main content

ஶ்ரீ மகா விஷ்ணு

ஓம் அன்பின் சுடரே போற்றி
ஓம் அளவிலா அறமே போற்றி
ஓம் அருட்கடலே போற்றி
ஓம் அரவ சயனா போற்றி
ஓம் அக்காரக்கனியே போற்றி
ஓம் அரவிந்தலோசனா போற்றி
ஓம் அச்சத மூர்த்தி போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அநாதரட்சகா போற்றி
ஓம் அலர்மேல் மார்பா போற்றி
ஓம் அலங்கார பிரியனே போற்றி
ஓம் ஆதிநாராயணா போற்றி
ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
ஓம் ஆழ்வார் உயிரே போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆபத்து சகாயா போற்றி
ஓம் ஆலிலை பாலகா போற்றி
ஓம் ஆனையை காத்தாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் இன்னல் தீர்ப்பாய் போற்றி
ஓம் இமையவர் தலைவா போற்றி
ஓம் ஈகை நெஞ்சினாய் போற்றி
ஓம் உலகமுண்ட வாயா போற்றி
ஓம் உம்பர் கோமானே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எட்டெழுத்தானே போற்றி
ஓம் எழில்மிகு தேவா போற்றி
ஓம் ஏழுமலையானே போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஒளிமணி வண்ணா போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் கண் கண்ட தேவா போற்றி
ஒம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கருட கொடியானே போற்றி
ஓம் கமலக் கண்ணனே போற்றி
ஒம் கஸ்துõரி திலகனே போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கார்முகில் வண்ணா போற்றி
ஓம் குன்றம் தாங்கினாய் போற்றி
ஓம் கோவிந்த மூர்த்தி போற்றி
ஓம் கோபியர் லோலா போற்றி
ஓம் கோகுல பாலா போற்றி
ஓம் கோதண்டபாணி போற்றி
ஓம் சர்வலோக சரண்யா போற்றி
ஓம் சபரிக்கு அருளினாய் போற்றி
ஓம் சகஸ்ரநாம பிரியனே போற்றி
ஓம் சாந்த சொரூபியே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சங்கரப்பிரியனே போற்றி
ஓம் சங்கு சக்கர தாரியே போற்றி
ஓம் சப்தகிரி வாசனே போற்றி
ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
ஓம் சீனிவாச பெருமாளே போற்றி
ஓம் சீதேவி நாயகனே போற்றி
ஓம் சுயம்பிரகாசா போற்றி
ஓம் சுந்தர தோளினாய் போற்றி
ஓம் சுந்தரராஜமூர்த்தி போற்றி
ஓம் செல்வ நாராயணனே போற்றி
ஓம் தசரதன் வாழ்வே போற்றி
ஓம் தசாவதாரம் எடுத்தாய் போற்றி
ஓம் திருமகள் கேள்வா போற்றி
ஓம் திருவேங்கடவனே போற்றி
ஓம் திருமலை உறைவாய் போற்றி
ஓம் திருத்துழாய் பிரியனே போற்றி
ஓம் துருவனைக் காத்தாய் போற்றி
ஓம் துன்பம் தீர்ப்பவனே போற்றி
ஓம் தேவகி பாலகனே போற்றி
ஓம் தோள்மாலை சூடினாய் போற்றி
ஓம் நந்தகோபாலனே போற்றி
ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் பக்தவத்சலனே போற்றி
ஓம் பக்தர் சகாயனே போற்றி
ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் பத்மநாபனே போற்றி
ஓம் பரம தயாளனே போற்றி
ஓம் பத்மாவதி துணைவா போற்றி
ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
 ஓம் பாற்கடல் உறைவாய் போற்றி
ஓம் பார்த்தசாரதியே போற்றி
ஓம் பார் புகழ் தேவா போற்றி
ஓம் பாஞ்சஜன்யம் ஏந்தினாய் போற்றி
ஓம் பாண்டவர் துõதா போற்றி
ஓம் பாஞ்சாலியை காத்தாய் போற்றி
ஓம் பாலாஜி வெங்கடேசா போற்றி
ஓம் பிரகலாதப் பிரியனே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் புரட்டாசி நாயகா போற்றி
ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
ஓம் மண்மலர் ஏற்றாய் போற்றி
ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
ஓம் மலையப்ப சுவாமி போற்றி
ஓம் மாயக் கண்ணனே போற்றி
ஓம் யசோதை கண்மணியே போற்றி
ஓம் ராமானுஜர் வாழ்வே போற்றி
ஓம் வகுளமாலிகா செல்வனே போற்றி
ஓம் விஜய ராகவனே போற்றி
ஓம் வில்லொடித்த வீரா போற்றி
ஓம் வீபிஷணன் வாழ்வே போற்றி
ஓம் வெண்ணெயுண்ட வாயா போற்றி
ஓம் வேங்கடத்துறைவா போற்றி
ஓம் வைகுண்டவாசனே போற்றி
ஓம் வையம் காப்பவனே போற்றி
ஓம் நமோ நாராயணனே போற்றி போற்றி.

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...