Skip to main content

நாகர்கோவில்

                     பாம்பு மே காடு ( திருச்சூர், கேரளா ) நம்பூதிரி வாசுகி உபதேசித்த பத்து சிகிச்சை, விஷ சிகிச்சை செய்து கொண்டு இருந்தார்.ஒருநாள் தமிழ்நாட்டு ராஜாவுக்கு பத்து நோய் வந்தது.அவர் எங்கு  வைத்தியம் பார்த்தும் குணமாகவில்லை. நம்பூதிரி வாசுகி பற்றி தெரிந்து அவரை சிகிச்சை செய்ய அழைத்தார்.

                       அவரும் சிகிச்சை செய்து விட்டு நாகர்கோவில் வழியாக காட்டு பாதையில் வருகிறார். அப்போது ஒரு பெண்ணின் குரல் கேட்டு திரும்பி பார்க்கிறார். அங்கு அழுது கொண்டிருந்த பெண்ணிடம் காரணம் கேட்கிறார். அந்தப்பெண் தான் காட்டில் புல் அறுத்து கொண்டிருக்கும் போது ஐந்து தலை கொண்ட நாக சிலையில் என் அரிவாள் பட்டு ரத்தம் வழிகிறது. இது சாதாரண சம்பவம் இல்லை என சொல்கிறாள்.

                    நம்பூதிரி தன் மந்திர சக்தியால் நாகத்தை வேண்டி வந்த ரத்தத்தை நிறுத்துகிறார். இங்கு ஆனந்த மூர்த்தியின் சாந்நித்யம் இருப்பதை உணர்ந்து மெய்சிலிர்கிறார். பின்னர் அங்குள்ள் மக்களை அழைத்து நாகரின் பெருமைகளை சொல்லி தேவஸ்தானம் அமைத்து கோவில் காட்டுகிறார். தொடர்ந்து பூஜா நடைபெறுகிறது.

                      அதனால் தேடி வரும் மக்களுக்கு நாகரின் அருள்கிடைக்கிறது. இது கேரளாவில் இருந்தது. 1956 நவம்பர் 1 ம் தேதி தமிழ் நாட்டுடன் சேர்க்கப்பட்டது.கொடு நல்லூர் பரணி காலத்தில் அனைவரும் கோவில் உள்ளே செல்லலாம். இங்கு நடை திறந்து மூடுவது இல்லை.ஆயில்யம் நட்சத்திரத்தன்று சிறப்பு பூஜா நடைபெறும். பாம்பு மே காடு நம்பூதிரி வம்சத்தின் வயதானவரே இங்கு பூஜா செய்கின்றனர். 

                      கதலிப் பழம்,பால் பிரதான நெய்வேத்தியம் ஆகும். மற்றும் சர்பப்பலி, முடியேற்று வழிபாடாகும். இங்கு சர்ப்ப தோஷ நிவர்த்தி குழந்தை இல்லாதவருக்கு குழந்தை கிடைக்கிறது. அதனால் இங்கு தெய்வ சக்தியால் திரும்ப திரும்ப மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

Popular posts from this blog

நவகிரக கோவில்கள்

தமிழ்நாட்டில் திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளன. இந்த நவக்கிரக ஸ்தலங்கள் யாவும் கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளன. கும்பகோணத்தில்  இருந்து மயிலாடுதுறை 36 கிலோ மீட்டர். 1 மணி நேர பயணம். நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். 1. திங்களூர் சந்திரன் நவக்கிரக ஸ்தலங்களில் நீங்கள் முதலில் பார்க்கவேண்டியது திங்களூர்தான். பேருந்தில் செல்ல விரும்பினால், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து திங்களூர் செல்வதற்கு நிறைய பேருந்துகள் உள்ளன.பேருந்து மூலம் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். 2. ஆலங்குடி குரு பகவான்  கும்பகோணத்திலிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். அங்கே ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர...

பிதுர் தோஷம் போக்கும் - திலதர்ப்பணபுரி.

பெற்றோர்கள் வாழுகின்ற காலத்திலும், வாழ்ந்த பின்னரும் அவர்களுடைய பிள்ளைகள் தம் கடமையை சரிவர செய்ய வேண்டும். அப்படி கடமை தவறும் பிள்ளைகளுடைய சந்ததிகள் பித்ரு தோஷத்தால் பாதிப்படைவர். முன்னோருக்குத் தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திலதர்ப்பணபுரி, கயா, அலகாபாத், ஆகிய ஏழு தலங்கள். இராமபிரானே தம் தந்தை தசரதருக்கும் ஜடாயுவிற்கு சிரார்த்தம் செய்வித்த தலம் தில தர்ப்பண புரி. சீதையை இராவணன் கடத்தியபோது ஜடாயு மன்னன் இராவணனை எதிர்த்து போரிட இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர் பிறப்பற்ற நிலையாகிய முக்தியை அடைவர் என்பதால் சுவாமிக்கு முக்தீஸ்வரர் என்றும் தலம் திலதர்ப்பணபுரி. லிங்கங்களுக்கு அருகே வலதுகாலை மண்டியிட்டு வடக்கு நோக்கித் திரும்பி வணங்கியபடி இருக்கும் இராமரையும் காணலாம். செல்லும் வழி : திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பூந்தோட்டம்.    

திருச்செந்தூர் முருகன் கோவில்

சூரபத்மன் சிவபெருமானிடம் தன்னுடைய சக்தியால் தோன்றியவரைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என வரம் பெற்றான். அதனால அவன் தேவர்களை கொடுமை படுத்த துவங்கினான். சிவபெருமான் தனிமையில் தவம் மேற்கொணடார். அவருக்கு பார்வதி பணிவிடை செய்து வந்தார். தேவர்கள் ஒன்று சேர்ந்து இந்திரனிடம் சூரபத்மனின் கொடுமை தீர வழி செய்யுமாறு கேட்டனர். ஆறுமுகப் பெருமான் அருள் புரிகின்ற ஆறுபடை வீடுகளில்  இரண்டாம் படை வீடு  ஆகும். திருச்செந்தூரை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை நூலில் இரண்டாம் படை வீடு என்று குறிப்பிடுகிறார். நக்கீரர் திருச்செந்தூரை திருச்சீரலைவாய் என்றும் சிலப்பதிகாரத்தில் செந்தில் என்றும் திருச்செந்திலூர், திரிபுவனமாதேவி, சதுர்வேதி மங்களம் என்றும் அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதர் காலத்தில் திருச்செந்தூர் என வழங்கப் பட்டது. மூர்த்தி, ஸ்தலம் தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்பு  உடையது திருச்செந்தூர் ஆகும். இலங்கைத் தீவை வடக்கு எல்லையாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த சூரபத்மனை வெல்லும் பொருட்டு ஆறுமுகப் பெருமான் வீறுடன் வந்து தங்கியிருந்த  ஸ்தலம்  திருச்செந்தூர்...