உரோமச முனிவர் தாமிரபரணி தென்கரையை அடைந்து, அங்கு ஆலமரத்தடியில் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்த போது, சிவபெருமான் முனிவருக்குக் காட்சி கொடுத்ததார்.
நவகயிலாயத்தில் இரண்டாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சந்திரன் அம்சமாக விளங்குகிறார். அம்மைநாதர் திருவாயில், ஆவுடையம்மன் திருவாயில் என்று இரண்டு பெரிய வாயில்கள் உள்ளன. வடக்குப் பகுதி அம்மைநாதர் சந்நிதி. தெற்குப்பகுதி ஆவுடையம்மன் திருத்தளி. கோயில் நந்தி, கொடிமரங்கள் உள்ளன. தென்பகுதியில் நடராஜர், சிவகாமி, காரைக்கால் அம்மையார் உள்ளனர்.
கோயில் மணிமண்டபத் தூணில் உரோமச முனிவர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெற்குத்தும் காட்சி வடக்கு ஒரத்தூணில் உள்ளது. அக்காளும், தங்கையும் நெற்குத்திய கூலியைக் கொண்டு இந்தக் கோயிலைக் கட்டியதாக கூறப்படுகிறது.
யாச முனிவருக்கு அருள்பாலித்த யாச தீர்த்தம் இந்த கோயிலுக்கு அருகில் உள்ளது. கோயிலுக்கும் யாச தீர்த்தத்துக்கும் நடுவில் ஒரு பாறை உள்ளது. அதற்கு ரணவிமோசனப் பாறை என்று பெயர். இந்த தீர்த்தத்தில் நாற்பத்தோரு நாட்கள் தொடர்ந்து நீராடினால் எல்லாவித நோயும் தீரும்
இக்கோயிலில் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவாதிரைத் திருநாளும், சிவராத்திரி விழாவும் நடைபெறுகிறது
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி - செங்கோட்டை செல்லும் வழியில் நெல்லைக்கும், அம்பாசமுத்திரத்திற்கும் நடுவிலுள்ளது. சேரன்மகாதேவி ரயில்நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள இத்தலம் தற்போது சேர்மாதேவி என்று வழங்கப்படுகிறது.
மூலவர் : ஸ்ரீஅம்மநாதர் சுவாமி
அம்பிகை : ஆவுடைநாயகி
தலவிருட்சம் : ஆலமரம்
நவகைலாயம்
1.பாபநாசம் - சூரியன்
2.சேரன்மாதேவி - சந்திரன்
3.கோடகநல்லூர் - செவ்வாய்
4.குன்னத்தூர் - இராகு
5.முறப்பநாடு - குரு
6.ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்
7.தென்திருப்பேரை - புதன்
8.ராஜபதி - கேது
9.சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
1.பாபநாசம் - சூரியன்
2.சேரன்மாதேவி - சந்திரன்
3.கோடகநல்லூர் - செவ்வாய்
4.குன்னத்தூர் - இராகு
5.முறப்பநாடு - குரு
6.ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்
7.தென்திருப்பேரை - புதன்
8.ராஜபதி - கேது
9.சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
