பரீட்சத்து மன்னரையும், நளனையும் தீண்டிய கார்க்கோடக பாம்புக்கு மகாவிஷ்ணு முக்தியளித்த தலம் இது என்பதால் இந்த 'கார்கோடக ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் இங்கு கருநாகப் பாம்புகள் அதிகம். கோடைக்காலத்தில் இங்கு குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் அது நாளடைவில் மருவி கோடகநல்லூர் என்றாயிற்று.
நவகயிலாயத்தில் மூன்றாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் செவ்வாய் அம்சமாக விளங்குகிறார். இது செவ்வாய் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. ஊரின் வடக்கில் உள்ளது இந்த கோயில். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். கோயிலுக்குள் கோபுரமோ, கொடிமரமோ இல்லை.
நவகயிலாயத்தில் மூன்றாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் செவ்வாய் அம்சமாக விளங்குகிறார். இது செவ்வாய் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. ஊரின் வடக்கில் உள்ளது இந்த கோயில். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். கோயிலுக்குள் கோபுரமோ, கொடிமரமோ இல்லை.
ஆதிசங்கரர் இவ்வூரை 'தட்சிண சிருங்கேரி' என்று கூறியுள்ளார். தாமிரபரணி ஆற்றை இவ்வூர் மக்கள் 'தட்சிண கங்கை' என்கிறார்கள்.
திருவாதிரை, சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. மற்ற நாட்களில் ஒரு வேளை மட்டுமே பூசை நடைபெறுகிறது
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி - முக்கூடல் செல்லும் சாலையில் உள்ள நடுக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.
மூலவர் : கைலாச நாதர்
அம்பிகை : சிவகாமி அம்மன்
நவகைலாயம்
1.பாபநாசம் - சூரியன்
2.சேரன்மாதேவி - சந்திரன்
3.கோடகநல்லூர் - செவ்வாய்
4.குன்னத்தூர் - இராகு
5.முறப்பநாடு - குரு
6.ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்
7.தென்திருப்பேரை - புதன்
8.ராஜபதி - கேது
9.சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
1.பாபநாசம் - சூரியன்
2.சேரன்மாதேவி - சந்திரன்
3.கோடகநல்லூர் - செவ்வாய்
4.குன்னத்தூர் - இராகு
5.முறப்பநாடு - குரு
6.ஸ்ரீ வைகுண்டம் - சனி பகவான்
7.தென்திருப்பேரை - புதன்
8.ராஜபதி - கேது
9.சேர்ந்தபூமங்கலம் - சுக்கிரன்
